Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

10:51 PM Nov 15, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், இ-சேவை மையங்களில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் குவிந்தனர். சான்றுகள் கிடைப்பதில் கால தாமதம், சர்வர் பிரச்னை போன்ற காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பிறகு பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
crop insurancefarmersFarmers welfarenews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduTN Gvt
Advertisement
Next Article