Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

வங்கக் கடலில் அதிகாலை 6.10 மணி அளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
09:44 AM Feb 25, 2025 IST | Web Editor
வங்கக் கடலில் அதிகாலை 6.10 மணி அளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement

வங்கக் கடலில் இன்று(பிப்.25) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வங்கக் கடலில் இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.

Advertisement

கொல்கத்தாவில் இருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. கடந்த ஜனவரி 7ஆம் தேதி நேபாளம் மற்றும் இந்தியாவில் சில பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 90க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி டெல்லியில்  4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இதையடுத்து நேற்று(பிப்.25) மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
bay of bengalearthquakeKolkataWest bengal
Advertisement
Next Article