Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம்!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
08:16 AM Apr 16, 2025 IST | Web Editor
Advertisement

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளன.

Advertisement

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.

தலைநகரமான டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
afghanistanciviliansearthquakeROADshelter
Advertisement
Next Article