Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மோடி அவர்களே பயப்படாதீர்கள்...” - காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கத்திற்கு ராகுல்காந்தி எம்.பி கண்டனம்!

01:47 PM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.  

Advertisement

காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கென் இன்று காலை தெரிவித்தார்.  மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வங்கிக் கணக்குகளை முடக்குவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் எனவும் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  மேலும்,  “மோடி ஜி பயப்படாதீங்க,  காங்கிரஸ் என்பது பண பலத்தால் உருவான கட்சி அல்ல,  அது மக்கள் பலத்தால் உருவான கட்சி.  சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணியவும் மாட்டோம்,  தலைவணங்கவும் மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Democracy Under Attack | Rahul Gandhi | Congress | Bank Account | Freeze | Condemn |Election2024
Advertisement
Next Article