Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று #Powercut தெரியுமா?

06:52 AM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் உள்ள சில பகுதிகளில் இன்று (31.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Advertisement

மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னை நகரின் சில பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் - 31ம் தேதி) மின்வாரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் :

கிண்டி, ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், வானூவம்பேட், குரோம்பேட்டை, தாம்பரம் மேற்கு, பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சேலையூர், செம்பாக்கம், கடப்பேரி, திருவேற்காடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதனால் மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துக்கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

Tags :
ChennaiElectricityPowerCutTANGEDCO
Advertisement
Next Article