Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"2024ல் திமுக கை நீட்டுபவரே பிரதமராக வேண்டுமெனில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

04:34 PM Nov 26, 2023 IST | Web Editor
Advertisement

திமுக கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலனைச்சருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திமுக தலைவரும்
முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஐ பெரியசாமி, ஆர் ராசா, கனிமொழி, பொருளாளர்
டி.ஆர். பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது இளைஞர் அணி மாநில மாநாடு குறித்தும்,நாடாளுமன்ற தேர்தலில் வரக்கூடிய நிலையில் வாக்குசாவடி பொறுப்பாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது..

மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி விடியல் பயணம் வரை மகளிருக்கு பல்வேறு
திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். இத்திட்டங்கள் மகளிரிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. செல்லுமிடங்களில் எல்லாம் மகளிரின் உண்மையான அன்பை காண்கிறேன். இனி எந்தக் காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியின் செயலாளராக 2019 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பிறகு அணியின் பணிகள் பன்மடங்கு வேகம் எடுத்திருக்கின்றன. இன்றைய தேதியில் 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவான படையாக இளைஞரணி திகழ்கிறது. பகுதி-ஒன்றியம்-நகரம்-பேரூர் அளவில் மட்டுமின்றி வார்டு, கிளை அளவிலும் அணியை வலுவாகக் கட்டமைத்திருக்கிறார்கள்.

234 தொகுதிகளில் 280 பாசறைக் கூட்டங்களை நடத்தி இளைஞரணியினரை கொள்கை
உணர்வாளர்களாக மாற்றியிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் யாருக்கும் எந்த
சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. இளைஞர்களையும், புதிய வாக்காளர்களையும்
ஈர்க்கும் எஃகு கோட்டையாக கழகம் திகழ்கிறது என்பதை இந்த மாநாட்டின் மூலமாக
நிரூபித்துக் காட்ட வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தலா ஆயிரம் இளைஞர்களாவது கலந்து
கொள்ளும் பிரம்மாண்டமான மாநாடாக அமைந்திட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால் நாம் 40
தொகுதிகளையும் வென்றாக வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே என்
நேரு தெரிவித்ததாவது..

இரண்டு முக்கிய முன்னெடுப்புகளுக்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட
செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்காக 70 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டு மண்டல வாரியாக பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மண்டலங்களில் மிகப்பெரிய
மாநாடுகளைப் போல இந்த கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உறுப்பினர்களின் அடுத்த கட்ட பணிகள் குறித்து
மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும்
சந்திக்க கூடிய அளவுக்கு தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர்
கட்டளையிட்டுள்ளார்

சேலத்தில் நடைபெறக்கூடிய இளைஞர் அணி மாநில மாநாடு அமைச்சர் உதயநிதி
தலைமையில் ஒரு நாள் மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின்
ஒருங்கிணைப்பாளராக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறேன். 5 லட்சம் இளைஞர்கள்  இந்த மாநாட்டிற்கு வர உள்ளார்கள்

திமுகவின் இரு வண்ணக் கொடியை மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஏற்றி வைக்கிறார். மாணவர் அணி செயலாளர் சிவி எழிலரசன் மாநாட்டை தூங்கி வைத்து
உரையாற்றுகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாடு முக்கிய மாநாடாகவும், தேர்தல் முன்னோட்டமாகவும் அமையும்” என என தெரிவித்தார்

Tags :
மு.க.ஸ்டாலின்திமுகMK StalinMKStalinNEWS 7 TAMILNews7 Tamil UpdatesNews7Tamilnews7TamilUpdatesTNGovt
Advertisement
Next Article