Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இத்தாலியில் ரூ.10 லட்சத்தை இழந்த நடிகை திவ்யங்கா திரிபாதி!

09:58 PM Jul 12, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபாதியின் பாஸ்போர்ட் மற்றும்  ரூ.10 லட்சம் உள்பட அவர்களின் உடைமைகள் இத்தாலியில் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Advertisement

புகழ் பெற்ற இந்திய தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபாதி.  இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.  பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார்.  திவ்யங்கா திரிபாதி அவருடைய கணவர் விவேக் தகியாவுடன் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.  அப்போது, ஃப்ளோரன்ஸ் நகரத்தில் பாஸ்போர்ட், ரூ.10 லட்சம் உள்பட அவர்களுடைய உடைமைகள் திருடப்பட்டதாக, திவ்யங்கா நேற்று (ஜூலை 11) தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து திவ்யங்கா கவனக்குறைவாக இருந்ததாகவும், இனி கவனமாக இருக்க வேண்டும் என்றும் சிலர் அறிவுரை கூறியிருந்தனர்.  மேலும் சிலர் பண உதவி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

அவர்களுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த திவ்யங்கா, "எங்களுடைய கார் ஒரு பாதுகாப்பான விடுதியில் தான் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், உதவி செய்ய முடிந்தால் உதவுங்கள், இல்லையெனில் உங்கள் வேலையைப் பாருங்கள். பண உதவி செய்ய முற்பட்ட அனைவருக்கும் நன்றி. ஆனால், எங்களிடம் போதுமான பணம் இருப்பதால், தற்போது தேவையில்லை” என்று கூறி பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியைக் குறிப்பிட்டு "இங்கு கொள்ளை சம்பவங்கள் மிகவும் சாதாரணமாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் நாங்கள்எங்களுடைய மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் இழந்து விட்டோம். இனி இத்தாலிக்கு எவ்வாறு வருவோம்?’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Divyanka TripathiGiorgia MeloniItaliMoneyPasportTelevision actorVivek Dahiya
Advertisement
Next Article