Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எந்த கிரிக்கெட் வீரருக்கும் பரிசளிப்பதாக அறிவிக்கவில்லை: ரத்தன் டாடா மறுப்பு!

01:10 PM Oct 30, 2023 IST | Syedibrahim
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கோ அல்லது எந்த கிரிக்கெட் வீரருக்கோ பரிசளிப்பதாக தான் எந்தவொரு அறிவிப்பும் செய்யவில்லை என்று தொழிலதிபர் ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்துள்ளார். 

Advertisement

இது குறித்து ரத்தன் டாடா அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் வெகுமதி வழங்குவது பற்றி ஐசிசி அல்லது பிற கிரிக்கெட் கவுன்சிலிடம் நான் கூறவில்லை.  கிரிக்கெட்டுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. எனது அதிகாரப்பூர்வ தளங்களை தவிர்த்து வரும் வாட்சப் ஃபார்வர்டுகள் மற்றும் விடியோக்களை நம்பவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கானுக்கு ரத்தன் டாடா ரூ.10 கோடி பரிசுத்தொகை அறிவித்ததாக போலியான வாட்சப் ஃபார்வர்டுகளும்,  விடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து ரத்தன் டாடா இந்தப் பதிவினை பதிவிட்டுள்ளார்.

திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.  மேலும் 50 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
afghanistanCricketindustrialistInternationalCricketCouncilRashidKhanratantataRatanTataDeniesrewardRs10CroreRewardworldcup
Advertisement
Next Article