டெல்லியில் 58க்கு மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியானதா?
This News Fact Checked by ‘Boom’
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 58-60 இடங்களைப் பெறும் என்று ஒரு கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது.
இந்த கருத்துக்கணிப்பில், பாஜக 10-12 இடங்களைப் பெறும் என்றும், காங்கிரஸ் 0 இடங்களைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த விசாரணையில் வைரலான காணொளி திருத்தப்பட்டது என்று கண்டறியப்பட்டது. ABP நியூஸ் அதன் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் இதுபோன்ற எந்த கணக்கெடுப்பையும் நடத்தவில்லை என்று மறுத்துள்ளது.
டெல்லி சட்டமன்றத்தின் 70 சட்டமன்ற இடங்களுக்கு பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து செய்தி சேனல்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
'ஆம் ஆத்மி கட்சிக்கு 58 முதல் 60 இடங்கள் வரை கிடைக்கும் என்று ஏபிபியின் கருத்துக்கணிப்பு கணித்துள்ளது. ஆம் ஆத்மி 58-60 இடங்கள், பாஜக 10-12 இடங்கள், காங்கிரஸ் 0 இடங்களை பெறும். கணக்கெடுப்பின் முக்கிய புள்ளிகள்: டெல்லி மக்கள் குண்டர்களுக்கு எதிராக வாக்களிக்கின்றனர். சுமார் 75% பெண்கள் கெஜ்ரிவாலுக்கு வாக்களிக்கின்றனர். கெஜ்ரிவால் திரும்பி வருகிறார்' என்று ட்விட்டர் (எக்ஸ்) பயனர் வைரலான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
உண்மைச் சரிபார்ப்பு:
விசாரணையின் போது, வைரலான காணொளியில் தொகுப்பாளரின் குரலும், உதட்டு அசைவும் பொருந்தவில்லை என கண்டறியப்பட்டது. மேலும், ஏபிபி செய்திகளின் லோகோ வீடியோவில் தெரியவில்லை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
மேலும், வைரலான காணொளியிலிருந்து ஆடியோவைப் பிரித்தெடுத்து, அதை AI கண்டறிதல் கருவியான ஹியா ஏஐயில் பதிவேற்றியபோது, அதில் ஆடியோவில் உள்ள குரல் AI மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இதன் பிறகு, வைரலான காணொளியின் முக்கிய பிரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, ஏபிபி ஒளிபரப்பிய நிகழ்ச்சியின் அசல் காணொளி கிடைத்தது. இந்த குறுகிய காணொளி யூடியூப்பில் 28 ஜனவரி 2025 அன்று பதிவேற்றப்பட்டது. இதில், டெல்லி தேர்தல் தொடர்பாக ராகுல் காந்தியின் பேரணி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏபிபி செய்தி நிறுவனமும் இந்த கணக்கெடுப்பை மறுத்தன.
ஏபிபி நியூஸ் தனது ட்விட்டரில் இதுபோன்ற எந்தவொரு கணக்கெடுப்பையும் நடத்தியதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. இது தொடர்பாக அச்செய்தி நிறுவனம் ஒரு போலி செய்தி எச்சரிக்கையை வெளியிட்டு, 'ஏபிபி நியூஸ் என்ற பெயரில் ஒரு போலி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஏபிபி நியூஸ் அத்தகைய கருத்துக் கணிப்பு எதுவும் நடத்தவில்லை' என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.