ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏ பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீத்-க்கு டாடா டிரஸ்ட்ஸ் விருது வழங்கி கவுரவித்ததா?
This News Fact Checked by ‘The Quint’
ஜம்மு காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர், பொறியாளர் ரஷீத் என்று நன்கு அறியப்பட்ட ஷேக் அப்துல் ரஷீத், சமீபத்தில் டாடா டிரஸ்ட்ஸால் நிதியளிக்கப்பட்ட நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்று பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
கூற்று:
இந்தப் பதிவுகளை, ‘சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் பயங்கரவாத நிதியுதவி குற்றச்சாட்டில் சிறையில் உள்ள ரஷீத், டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் டெல்லி டுடே குழுமத்தால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் ரத்தன் டாடா தொலைநோக்கு ஐகான் விருது 2025 வழங்கி கௌரவிக்கப்பட்டார்’ என பகிர்ந்து வருகின்றனர்.
(மேலும் உரிமைகோரல்களின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்)
அது உண்மையா?: இல்லை, இந்த நிகழ்வை டாடா குழுமம் ஆதரிக்கவில்லை அல்லது நிதியளிக்கவில்லை.
- இதுகுறித்து டாடா டிரஸ்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிகழ்வு அல்லது விருதுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினர்.
உண்மை சரிபார்ப்பு:
கூடுதல் தகவல்களைத் தேடுவதற்காக விருதின் பெயரைப் பயன்படுத்தி கூகுளில் முக்கிய வார்த்தை தேடல் செய்யப்பட்டது.
- Delhi Today குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ரஷீத் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டதாகவும், பிப்ரவரி 10-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ரத்தன் டாடா தேசிய ஐகான் விருது 2025 ஐ அவருக்கு வழங்கி கௌரவிக்கும் என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கையில் டாடா குழுமம் அல்லது டாடா அறக்கட்டளைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.
- அடுத்து, இந்த நிகழ்வைப் பற்றிய தகவல்களை டாடா டிரஸ்ட்ஸின் வலைத்தளத்தில் தேடியபோது, அதில் பொறியாளர் ரஷீத் குறிப்பிடப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
- மேலும், முகப்புப் பக்கம் ஒரு விளக்கத்தைக் கொண்டிருந்தது. அதில், நடைபெற்ற நிகழ்விலிருந்து தங்களை விலக்கிக் கொள்வதற்கான குறிப்பாகும்.
- அதில், இந்த நிகழ்வு(கள்) அல்லது விருது அல்லது அதன் ஏற்பாட்டாளர்களுடன் டாடா டிரஸ்ட்ஸ்-க்கு எந்த வகையிலும் எந்த தொடர்பும் இல்லை என்றும், டிசம்பர் 13 அன்று டெல்லி டுடே குழுமத்தின் நிறுவனர் ரஜத் ஸ்ரீவஸ்தவாவுக்கு டாடா டிரஸ்ட்ஸ் பிராண்ட் பெயர் மற்றும்/அல்லது எங்கள் மறைந்த தலைவர் ஸ்ரீ ரத்தன் என்.டாடாவின் பெயரை இந்த நிகழ்வுகளுக்குப் பயன்படுத்துவதை நிறுத்தவும் கேட்டு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
- இந்த அறிக்கை அவர்களின் சமூக ஊடக கணக்குகளிலும் பகிரப்பட்டது.
முடிவு:
டாடா டிரஸ்ட்ஸ் நிதியுதவி அளித்த நிகழ்வில் பொறியாளர் ரஷீத்துக்கு விருது வழங்கி கௌரவிப்பது குறித்த தவறான கூற்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.