மகாகும்பமேளாவின் செயற்கோளை படத்தை சுனிதா வில்லியம்ஸ் அனுப்பினாரா? - வைரல் கூற்றின் பின்னணி என்ன?
This News Fact Checked by ‘FACTLY’
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களுக்கும் மேலாக தங்கிய பிறகு, மார்ச் 18, 2025 அன்று நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பூமிக்கு திரும்பியபோது, இரண்டு புகைப்படங்கள் ( இங்கே , இங்கே , இங்கே , மற்றும் இங்கே ) சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. இந்த புகைப்படங்கள் 2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவைக் காட்டுவதாகக் கூறப்படுகின்றன, இதை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து படம்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பல பயனர்கள் கருத்துகளில் இந்த புகைப்படங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்தக் கூற்றுக்களின் உண்மையை சரிபார்ப்போம்.
வைரலான புகைப்படத்தின் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது ஸ்டாக் புகைப்பட வலைத்தளமான Alamy இல் பதிவேற்றப்பட்ட அசல், பதிப்பிற்கு எங்களை அழைத்துச் சென்றது. இதன் விளக்கம், இந்தப் புகைப்படம் ஜனவரி 14, 2021 அன்று எடுக்கப்பட்டது என்றும், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கும்பநகரியில் மக்கள் கங்கையில் புனித நீராடுவதை சித்தரிக்கிறது என்றும் கூறுகிறது. ஹரித்வாரில் இருந்து இந்த காட்சிகளைக் காட்டும் இதே போன்ற வான்வழி புகைப்படங்களை இங்கே , இங்கே மற்றும் இங்கே காணலாம் .
முன்னர் RISAT-1A என்று அழைக்கப்பட்ட EOS-04
இருப்பினும், ஊடக அறிக்கைகளின்படி ( இங்கே & இங்கே ), சுனிதா வில்லியம்ஸின் உறவினர் ஃபால்குனி பாண்ட்யா, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட கும்பமேளாவின் புகைப்படத்தை சுனிதா தனக்கு அனுப்பியதாகக் கூறினார். ஆனால் ஜனவரி 27, 2025 அன்று , நாசா விண்வெளி வீரர் டொனால்ட் ஆர். பெட்டிட் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த நேரத்தில், சுனிதா வில்லியம்ஸ் டொனால்ட் ஆர். பெட்டிட் மற்றும் பிற விண்வெளி வீரர்களுடன் ISS இல் இருந்தார் .
எனவே கும்பமேளாவின் இஸ்ரோவின் செயற்கைக்கோள் படம் சுனிதா வில்லியம்ஸின்சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தவறாகப் பரப்பப்பட்டது.
Note : This story was originally published by ‘‘FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.