தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?
This News Fact Checked by ‘India Today’
சமீபத்தில், நடிகர் மம்முட்டியின் உடல்நிலை குறித்து சில வதந்திகள் பரவி வருகின்றன. மம்மூட்டிக்கு புற்றுநோய் இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் பரவும் வதந்திகளை அவரது அலுவலகத்தைச் சார்ந்தவர்கள் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளனர். இதற்கிடையில், மம்முட்டி பேசும் காட்சி கொண்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவர் தனது நோயைப் பற்றி மனம் திறந்து பேசியதாகவும், அவருக்காக பிரார்த்தனை செய்யச் சொன்னதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
"இந்த நோன்பு மாதத்தில் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும், - மம்முட்டி பேச்சு" என்று கூறும் பதிவின் முழு உரையையும் கீழே காணலாம் .
இருப்பினும், இந்தியா டுடே நடத்திய விசாரணையில், பரப்பப்படும் பதிவுகள் தவறாக வழிநடத்துவதாகக் கண்டறியப்பட்டது. கோவிட்-19 விழிப்புணர்வு தொடர்பாக மம்மூட்டி ஏப்ரல் 14, 2020 அன்று பகிர்ந்த காணொலியின் திருத்தப்பட்ட பகுதி பரப்பப்படுகிறது.
உண்மை சரிபார்ப்பு :
மம்மூட்டியின் உடல்நிலை குறித்த செய்திகளை முதலில் நாங்கள் சரிபார்த்தோம். மம்மூட்டியின் உடல்நிலை குறித்த வதந்திகள் பொய்யானவை என்பதை அவரது மக்கள் தொடர்பு குழு உறுதிப்படுத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா மார்ச் 17, 2025 அன்று செய்தி வெளியிட்டது. மம்மூட்டியின் மக்கள் தொடர்பு குழு, அவர் சிறிய இடைவெளி எடுத்ததாகவும், ரமலான் பண்டிகைக்குப் பிறகு அவர் மீண்டும் சுறுசுறுப்பாக இருப்பார் என்றும் உறுதிப்படுத்தியிருந்தது. மம்மூட்டியின் சமூக ஊடகப் பக்கங்களையும் நாங்கள் சரிபார்த்தோம், ஆனால் அவர் தனது நோய் குறித்து சமீபத்தில் எந்தக் குறிப்பையும் தெரிவிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மோகன்லால் கூட மறுநாள் மம்முட்டி நன்றாக இருக்கிறார் என்று பதிலளித்தார் . மார்ச் 25 அன்று சென்னையில் நடைபெற்ற எம்புரான் திரைப்படத்தின் விளம்பரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் மோகன்லால் பேசும்போது . " அவர் நலமாக இருக்கிறார்." அவருக்கு ஒரு சிறிய பிரச்சனை இருந்தது. எல்லோருக்கும் அது இருக்கும். "அவ்வளவுதான் இருக்கு, பயப்பட ஒண்ணும் இல்ல "
வைரலான வீடியோ :
வைரலான காணொலியின் தொடக்கத்தில் சேர்க்கப்பட்ட மம்மூட்டியின் பதிலை நாங்கள் பின்னர் ஆராய்ந்தோம். தொடர்புடைய பகுதியின் கீஃப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலின் உதவியுடன் நாங்கள் சரிபார்த்தபோது, 2020 இல் மம்மூட்டியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட அசல் வீடியோவைக் காட்டியது. அதில் கோவிட்-19 தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக, மம்மூட்டி இந்த காணொலியை ஏப்ரல் 14, 2020 அன்று பகிர்ந்து கொண்டார்.
அதில் " கிளப் எஃப்எம்மின் சல்யூட் தி ஹீரோஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியின் சகோதரி ஷீனாவிடம் பேசினேன். கோவிட்-19 இலிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற அயராது உழைக்கும் நமது சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நான் அவர்களிடம் சுமார் 20 நிமிடங்கள் பேசினேன். நாம் ஒவ்வொருவரும் அவர்களின் வார்த்தைகளை முழுமையாகக் கேட்க வேண்டும்." எனக் குறிப்பிட்டு மம்மூட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் அதனை கீழே காணலாம்.
இந்த காணொலியின் சில பகுதிகள் வெட்டப்பட்டு, மம்முட்டியின் பேச்சு ஒலியடக்கப்பட்டு, பின்னர் அவரது தற்போதைய எதிர்வினையாகப் பகிரப்பட்டது தெளிவாகிறது. பல ஆன்லைன் ஊடகங்கள் இதுபோன்ற தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளன. மம்முட்டியின் உடல்நிலை தற்போது நலமுடன் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிடைக்கக்கூடிய தகவல்களிலிருந்து, கோவிட்-19 விழிப்புணர்வு தொடர்பாக மம்மூட்டி 2020 இல் பகிர்ந்த காணொலி இப்போது தவறாக வழிநடத்தும் வகையில் பரப்பப்படுகிறது என்பது தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.