நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்து இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தாரா?
This News Fact Checked by ‘Boom’
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது கணவர் ஜாகீர் இக்பாலுடன் பர்தா அணிந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்ததாக பதிவு ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் படத்தில், மைதானத்தில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு அருகில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை ஜாகீர் இக்பால் அணிந்திருப்பதைக் காணலாம்.
இந்த படத்தை சரிபார்த்து, அது போலியானது என உறுதி செய்யப்பட்டது. இந்தப் படம் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என தெரியவந்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மேற்பார்வையில் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 23-ம் தேதி நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் குரூப் நிலை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தது, அந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். இதன் தொடர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹாவின் இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
படத்தை வெளியிட்டு, ஒரு பயனர், “சோனாக்ஷி காதுன் 11 பாகிஸ்தானிய சகோதரர்கள் முன் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து தோன்றினார்…” என்று பதிவிட்டிருந்தார்.
பதிவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும், அதன் காப்பகத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
உண்மை சரிபார்ப்பு:
இதுதொடர்புடைய முக்கிய வார்த்தைகளைத் தேடியதில், சோனாக்ஷி சின்ஹா புர்கா அணிந்து இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் பார்த்தது உட்பட, படத்தைப் பற்றிக் குறிப்பிடும் நம்பகமான அறிக்கைகள் அல்லது ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதில் சந்தேகம் ஏற்பட்டதால், படத்தை ஹைவ் மாடரேஷன் என்ற AI கண்டறிதல் கருவியைப் பயன்படுத்தி சோதித்ததில், இந்தப் படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.
கீழே படத்தில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகளைக் காணலாம்.
ஹைவ் மாடரேஷன் கருவி மூலம் நடத்தப்பட்ட சோதனையில் இந்தப் படம் 98.7% AI பயன்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.