மகா கும்பமேளவிற்காக சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தாரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘PTI’
உரிமைகோரல்
ஜனவரி 31 அன்று ட்விட்டர் (எக்ஸ்) பயனர் ஒரு காணொளியைப் பகிர்ந்து, அதில் ஒரு TTE மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள பிரயாக்ராஜுக்குச் செல்லும் ஒரு வயதான பயணியிடமிருந்து வலுக்கட்டாயமாக பணம் எடுப்பதாகக் கூறினார்.
இந்தி மொழியில் எழுதப்பட்ட அந்தப் பதிவின் தலைப்பு: "சம்பவம் நடந்த இடம் தெரியவில்லை, ஆனால் இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதை வைரலாக்குங்கள். இதனால் இதைக் கண்டறிந்து இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியும், ஏனெனில் இந்த TTE பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ஏழை பயணியிடமிருந்து அனைத்து பணத்தையும் மோசடி செய்தார்" என பதிவிட்டிருந்தார்.
பதிவுக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு இங்கே, கீழே அதன் ஸ்கிரீன்ஷாட் உள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
InVid Tool Search என்ற கருவி மூலம் வீடியோவை இயக்கி, சில கீஃப்ரேம்கள் கண்டறியப்பட்டன. கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை இயக்கியபோது, அதே வீடியோவை இதே கூற்றைக் கொண்ட பல பயனர்கள் பகிர்ந்துள்ளது தெரியவந்தது. இதுபோன்ற 2 பதிவுகளை இங்கே, இங்கே காணலாம். அவற்றின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகள் முறையே இங்கே, இங்கே காணலாம்.
இதேபோன்ற காணொளி 2019ம் ஆண்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது கண்டறியப்பட்டது. அத்தகைய ஒரு பதிவை இங்கே காணலாம். அதன் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம். அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
தேடல் முடிவுகளை மேலும் ஆராய்ந்தபோது, ஜூலை 23, 2019 தேதியிட்ட டி.ஆர்.எம். பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு கிடைத்தது. அதில் சம்பந்தப்பட்ட ஊழியர் அப்போது இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் இந்தியில் இருந்த அந்தப் பதிவின் தலைப்பு: “வீடியோ கிளிப் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்த சம்பவம் 3-4 மாதங்களுக்கு முன்பு நடந்தது. டிக்கெட் வழங்க பயணியிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அவர் டிக்கெட்டை அளித்ததாக கூறினார். சம்பந்தப்பட்ட ஊழியர் விரிவான விசாரணைக்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த பதிவிற்கான இணைப்பு இங்கே, அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்து, கூகுளில் முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி தேடியதில், ஜூலை 25, 2019 தேதியிட்ட பத்ரிகாவின் ஒரு அறிக்கை கிடைத்தது. அதன் தலைப்பு: “ஓடும் ரயிலில் ஒரு முதியவரிடமிருந்து பணத்தைப் பறித்ததற்காக TTE இடைநீக்கம் செய்யப்பட்டார், வீடியோ மிக வேகமாக வைரலானது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கைக்கான இணைப்பு இங்கே மற்றும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
அமர் உஜாலாவின் மற்றொரு அறிக்கை ஜூலை 25, 2019 அன்று இந்த சம்பவத்தை பற்றி செய்தி வெளியிட்டது. அந்த அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பு, “சந்தௌலி: ரயிலில் ஒரு முதியவரிடமிருந்து TTE பணத்தைப் பறித்தார், வீடியோ வைரலான பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கைக்கான இணைப்பு இங்கே.
மேலும், “இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், கோட்ட ரயில்வே மேலாளர் முகல்சராய் குற்றம் சாட்டப்பட்ட TTE-ஐ இடைநீக்கம் செய்து, இந்த விஷயத்தை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார்” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, TTE ஒரு வயதான பயணியிடமிருந்து பணம் எடுக்கும் காணொளி 2019 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்று மேசை முடிவு செய்தது.
முடிவு:
மகா கும்பமேளாவிற்கு பிரயாக்ராஜ் செல்லும் ஒரு வயதான பயணியிடமிருந்து TTE ஒருவர் வலுக்கட்டாயமாக பணம் எடுப்பதைக் காட்டுவதாகக் கூறி, பல சமூக ஊடக பயனர்கள் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளனர். அதன் விசாரணையில், அந்த காணொளி 2019 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்று கண்டறியப்பட்டது. இந்த காணொளி சமீபத்தியது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.