முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக் கூட்டம்!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. இதனை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைப்பது, கூட்டங்கள் நடத்துவது என தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் ஆளும் திமுக, 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : வைகாசி விசாகம் கோலாகலம்… பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!
அதில், ‘ஓரணியில் தமிழ்நாடு’எனும் இயக்கத்தை தொடங்கி கட்சியின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை கட்சியின் உறுப்பினராக இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, நேற்றுமுன்தினம், திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக அவர் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜுன் 9) துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறை சார்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வவேலு, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் மற்றும் துறை சார்பான செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.