Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலி | தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

04:10 PM Jul 14, 2024 IST | Web Editor
Advertisement

கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலியாக தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

"காய்ச்சல் மற்றும் டெங்கு பரவுவதைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் டெங்கு பாதிப்புகள் அதிகளவில் பதிவாகியுள்ளன. எனவே தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நீலகிரி ஆகிய பகுதிகளில் அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியம். எல்லையோர மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகளை தடுக்க காய்ச்சல் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் பருவமழை பெய்து வரும் சூழலில் கர்நாடகாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சலையும் எதிர்கொள்ளும் வகையில் எல்லையோர மாவட்டங்களின் சுகாதாரத்துறை அலுவலர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :
denguedengue feverKarnatakanoticePublic HealthSelvavinayagamTamilNadu
Advertisement
Next Article