டெல்லி கூட்டநெரிசல் விபத்து - அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?
This News Fact Checked by ‘Newsmeter’
பிப்ரவரி 15 அன்று, புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 14 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் ரயில்களில் ஏற ஆயிரக்கணக்கான பயணிகள் ஒருநேரத்தில் கூடியிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. பிப்.15 அன்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
இந்தச் சூழலில், கூட்ட நெரிசல் மிகுந்த ஒரு ரயில் செல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, அதில் பக்தர்கள் கும்பமேளாவிற்கு பயணித்ததாக கூறப்படுகிறது.
உண்மைச் சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் கூற்றை ஆய்வுசெய்தபோது இந்தக் கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. இந்த காணொளி 2018ம் ஆண்டு முதல் இணையத்தில் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
வீடியோவின் கீஃப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அது பிப்ரவரி 27, 2018 அன்று யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவுக்கு எங்களை அழைத்துச் சென்றது. அந்த வீடியோ பீகாரின் பாட்னாவிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் அந்த சேனல் குறிப்பிட்டிருந்தது.
மேலும் அக்டோபர் 15, 2022 அன்று, உத்தரபிரதேச அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்பு X தளத்தில் அந்த வீடியோ UP-PET தேர்வுக்கு தொடர்பில்லாதது என்பதை தெளிவுபடுத்தியது.
வைரலான காணொலியின் சரியான இடம் மற்றும் ஆண்டை நியூஸ்மீட்டரால் சரிபார்க்க முடியவில்லை. இருப்பினும், இந்த காணொளி 2018 முதல் பரவி வருவதாகவும், உ.பி.யின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவுடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் நாங்கள் முடிவு செய்கிறோம். இந்தக் கூற்று தவறானது.
முடிவு :
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து பயணிகள் ஏற்றிச் சென்ற ரயில் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் அந்த வீடியோ 018 முதல் பரவி வருவதாகவும், உ.பி.யின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவுடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.