Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் தரிசன நேரம் நீட்டிப்பு!

08:53 AM Dec 11, 2023 IST | Web Editor
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், டிசம்பர் 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 1 மணி நேரம் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேவசம் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் மண்டல பூஜை தினத்தில் இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். மேலும், கூட்ட நெரிசலால் 12 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் திங்கள்கிழமை (டிச.11) முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்குப் பதில் பிற்பகல் 3 மணிக்கே நடைதிறக்கப்பட்டு, இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Darshan timeDevasam Board ChairmandevoteesextendedSabarimala Ayyappan Temple
Advertisement
Next Article