Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அப்பா மிகப்பெரிய பரிசு கொடுத்துள்ளார்” - பிறந்தநாள் விழாவில் பிரசாந்த் நெகிழ்ச்சி!

23 ஆண்டுகளுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் பிரசாந்த் இணைந்து நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
06:10 PM Apr 06, 2025 IST | Web Editor
Advertisement

நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தாதூன் ரீமேக்கான  அந்தகன் படத்தின் மூலம் நடிகர் பிரசாந்த் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் இயக்குநர் ஹரி பிரசாந்த்-ன் தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி  விஷாலின் ரத்னம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

Advertisement

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பிரசாந்த்-ன் பிறந்த நாள் விழாவில், இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 23 ஆண்டுகளுக்கு பிற இருவரும் இணையும் இப்படம் பிரசாந்த்-ன் 55வது படமாக உருவாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் பேசியபோது,  “அப்பா எனக்கு பிரசாந்த் 55 என்ற மிகப்பெரிய பரிசு கொடுத்துள்ளார். இது சாதாரண பரிசு கிடையாது. ஹரியும் நானும் இணைந்து திரைப்பயணத்தில் 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த படம் எதிர்பார்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும். தமிழ் படத்தை பார்த்து இப்போது பார்த்தும் நல்ல படம் என்று சொல்கிறீர்களோ அதே போல் இந்த படத்தில் நல்ல பாடல்கள், சண்டை காட்சிகள், கதை, ஸ்கிரீன் பிளே வேகமாக இருக்கும். எல்லோருக்கும் பிடித்த மாதிரி படம் அமையும்”

இவ்வாறு நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
hariPrasanthPrashanth55thiagarajan
Advertisement
Next Article