வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.23.50 உயர்ந்துள்ளதால், வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : WPL 2024 : பெங்களூரு அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது டெல்லி!
அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ரூ. 918.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளத. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து, ரூ.1960. 50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1937 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது விலை அதிகரித்து ரூ.1960.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதமும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையானது அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.