Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

90 டிகிரி பாலத்திற்கு எழுந்த விமர்சனங்கள் - மறுகட்டமைப்புக்கு தயாரான மத்திய பிரதேச அரசு!

மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட 90 டிகிரி மேம்பாலத்திற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதன் மறுகட்டமைப்பு பணிக்கு அம்மாநில அரசு தயாராகியுள்ளது.
04:21 PM Jun 19, 2025 IST | Web Editor
மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட 90 டிகிரி மேம்பாலத்திற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதன் மறுகட்டமைப்பு பணிக்கு அம்மாநில அரசு தயாராகியுள்ளது.
Advertisement

பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக்  பகுதியில் 90 டிகிரில் எல் வடிவ மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆகஸ்ட் முதல் 2025 வரை ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்பட திட்டமிடப்பட்டது.

Advertisement

இருப்பினும்,  திறப்பு விழாவிற்கு முன்பாக பாலத்தின் குறைபாடுள்ள வடிவமைப்பின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பரவலான விமர்சனங்களைத் தூண்டின. மேலும் பொதுமக்கள் மட்டும் எதிர்க் கட்சியினர் கட்டுமான பணிகள் குறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த பாலத்தின் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச பொதுப்பணித் துறையால் கட்டப்பட்ட இந்தப் பாலம், மணிக்கு 35 கிமீ வேகத்திற்கு மேல் பயணிக்கும் வாகனங்களுக்குப் பாதுகாப்பற்றது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்த பிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகளை முடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :
90 degree bridgeBhopalMadhya pradeshNHAI
Advertisement
Next Article