Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கொரோனா தொற்று - ஒரேநாளில் 12பேர் உயிரிழப்பு

09:10 AM Jan 06, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதும், 12 பேர் உயிரிழந்திருப்பதும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த சில நாள்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதிய வகை ஜெஎன்.1 திரிபு கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 761 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,423 என்ற எண்ணிக்கையிலிருந்து 4,334-ஆகக் குறைந்துள்ளது.


கேரளத்தில் அதிகபட்சமாக 1,249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் 1,240 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில்  914 பேரும், தமிழ்நாட்டில் 190 பேரும், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரத்தில் தலா 128 பேரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளத்தில் 5 நபர்கள், கர்நாடகத்தில் 4 பேர், மகாராஷ்டிரத்தில் இருவர், உத்தர பிரதேசத்தில் ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
covidcovid 19covid 19 casesdeath
Advertisement
Next Article