Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆணவக் கொலை குறித்து சர்ச்சை கருத்து! நடிகர் ரஞ்சித் மீது விசிக புகார்!

07:18 PM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

ஆணவக் கொலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரஞ்சித் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "நடிகரும், இயக்குநருமான ரஞ்சித் சமீபத்தில் நடித்துள்ள 'கவுண்டம்பாளையம்' திரைப்படத்தின் டிரெய்லரில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்க கூடிய சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவமானப்படுத்தும் விதத்திலும் பல்வேறு காட்சிகளை வைத்திருந்தார்.

இதனையடுத்து, காவல்துறை தலைமை இயக்குனரை நேரில் சந்தித்து திரைப்பட தணிக்கை குழுவிடமும் புகார் அளித்தோம்.  புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டன. இந்த நிலையில் நடிகர் ரஞ்சித் கடந்த 10ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் வகையிலும் அதை ஊக்குவிக்கிற வகையிலும் பொது வெளியில் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான வகையில் பேசி வரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
#ranjithActor RanjithkavundampalayamVanniyarasuVCK
Advertisement
Next Article