Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் கனமழை | நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

07:23 AM Jul 20, 2024 IST | Web Editor
Advertisement

கனமழை காரணமாக  நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.  அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  கடந்த 3 நாட்களில் மட்டும் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழை கொட்டியிருக்கிறது. இதற்கிடையே, மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடஙகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Heavy rainfallholidaynilgrisRainschool leavestudentTN Rain
Advertisement
Next Article