Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 3 பேரை #MadrasHighCourt நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

05:04 PM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 3 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Advertisement

இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் கொலிஜியம் பரிந்துரையின்படி நடைபெற்று வருகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் குழு புதிய நீதிபதிகளைத் தேர்வு செய்வது, இடம் மாற்றம் செய்வது போன்ற பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பும்.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அதற்கான அறிவிப்பை வெளியிடும். கொலிஜியத்தின் பரிந்துரைகளை நிராகரிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள மூவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. இவர்களில் என்.ஜோதிராமன் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
chennai High CourtCollegiumtamil nadu
Advertisement
Next Article