Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Coimbatore | காகத்திற்கு மறுஉயிர் கொடுத்த தீயணைப்பு வீரர்!

02:52 PM Sep 19, 2024 IST | Web Editor
Advertisement

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகத்தை தீயணைப்பு வீரர் முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் உள்ளது. இந்த தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மின் மாற்றியில் காகம் ஒன்று அமர்ந்திருந்தது. அப்போது அந்த காகத்தின்மேல் மின்சாரம் பாய்ந்த நிலையில், அந்த காகம் மயங்கி கீழே விழுந்தது. இதனைப் பார்த்த தீயணைப்பு வீரர் வெள்ளைத்துரை காகத்தை தூக்கி சோதித்த போது, அதற்கு இதயத்துடிப்பு இல்லாமல் இருந்தது.

உடனடியாக இதயத்துடிப்பை திரும்ப வர வைக்க அவர் சி.பி.ஆர். எனப்படும் முதலுதவியை செய்தார். பின்னர், காகத்தின் வாயில் தன் வாயை வைத்து ஊதினார். இதில் அந்த காகம் சிறிது நேரத்தில் உயிர் பிழைத்தது. தொடர்ந்து, அந்த காகத்தை அழைத்துச்சென்று நிழல் பகுதியில் விட்டனர். சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்த காகம் அங்கிருந்து பறந்து சென்றது. மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த காகத்தை தீயணைப்பு வீரர் சி.பி.ஆர். சிகிச்சை செய்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
CoimbatoreCPRcrowFire Service Mannews7 tamil
Advertisement
Next Article