Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருவள்ளூர் #Trainaccident - தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றம்! ரயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரம்!

07:22 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் தடம் புறண்ட அனைத்து பெட்டிகளும் அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்று இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்கள் மோதிக் கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.இந்த விபத்தில் நல்வாய்ப்பான யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : சீனாவின் #SpiderWoman… பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மலையில் ஏறி சாதனை படைத்த பெண்!

இந்த விபத்தில், 2 ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்திருந்தன. தடம் புரண்ட 5 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 7 பெட்டிகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில், ரயில் விபத்தில் தடம் புறண்ட அனைத்து பெட்டிகளும் அகற்றப்பட்டது.தற்போது தண்டவாளம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags :
coachesderailedKavarappettaiNews7Tamilnews7TamilUpdatesTiruvallurtrain accident
Advertisement
Next Article