Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு அரசு செலவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்! முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு!

10:50 AM Jan 04, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முதற்கட்ட தொகையாக  ரூ.20 கோடியை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தெற்கு ரயில்வேக்கு வழங்கியுள்ளது.

Advertisement

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’  என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் இருந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் விரைவு,  சொகுசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.  தற்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் வகையில் கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே,  இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில்,  தாம்பரம் - செங்கல்பட்டு வழித் தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு தரப்பிலும் தெற்கு ரயில்வேவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ரயில்வே திட்டங்களுக்கான நிதியை ரயில்வே துறையே எப்பொழுதும் ஒதுக்கீடு செய்யும். ஆனால்,  ரயில்வே நிதி கிடைத்து ரயில் நிலையம் அமைக்க காலதாமதம் ஏற்படும் என்பதால் தற்போது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறது.  திட்டத்தின் முதற்கட்ட தொகையாக 20 கோடி ரூபாயை சிஎம்டிஏ வழங்கியுள்ளது.  அடுத்தடுத்து ஆகும் செலவினை கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும்,  இந்தாண்டு இறுதிக்குள் இப்பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது.

Tags :
ChennaiCMDAKilambakkam New Railway StationNews7Tamilnews7TamilUpdatestamil nadu
Advertisement
Next Article