கிறிஸ்துமஸ் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
இயேசு கிறிஸ்துவின் உன்னத போதனைகளை நினைவுகூருவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் (ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த பண்டிகைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும்.
கிறிஸ்துமஸ் விழாவின் அடையாளங்களான நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தை போற்றுவோம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் உடல்நலத்துடன் இருக்கும் உலகை நோக்கி பயணிப்போம். இயேசு கிறிஸ்துவின் உன்னத போதனைகளை நாம் நினைவுகூருவோம்" என்று தெரிவித்துள்ளார்.