“மருத்துவ புரட்சி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
மருத்துவ புரட்சி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
06:46 PM Jun 10, 2025 IST
|
Web Editor
Advertisement
கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாவது இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு நிறைவு விழா மற்றும் புதிய கட்டப்பணிகள் தொடக்க விழா ,புதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
Advertisement
இவ்விழாவின்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது, “ கரூரில் கூடுதலாக 50 படுக்கை கொண்ட புதிய கட்டிடம் இன்று தொடங்கப்பட்டது. கரூர் மாவட்டத்தை தன்னிறைவு மாவட்டமாக உருவாக்கி வைத்து உள்ளார் செந்தில்பாலாஜி. 143 மாணவர்களுக்கு பட்டமளிப்பு வழங்கபடுகிறது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் இன்றைக்கு 2 கோடியே 25 லட்சம் பயனாளிகள் பயன் பெற்று உள்ளனர்.
Next Article