Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை தாம்பரம் - கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை இன்று ரத்து!

08:17 AM Sep 15, 2024 IST | Web Editor
Advertisement

தாம்பரம் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் - சென்னை கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயில் சேவைகள் இன்று 10 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

தாம்பரம் ரயில் நிலையம் அருகே சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் இன்று (செப். 15) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் 10 மணி நேரம், புறநகர் ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் ரயில்களும், தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயில்களும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்கு பதிலாக காலை 8:35 மணி முதல் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் ரயில் நிலையம் வரையில் மட்டும் ரயில்கள் இயக்கப்படும் என்றும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு எந்த புறநகர் ரயில்களும் இயக்கப்படாது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags :
beachpassengersSouthern RailwaysSuburban Train ServiceTambaram
Advertisement
Next Article