Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்! -புதிய ஆணையராக அருண் நியமனம்...

12:53 PM Jul 08, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரு தேசிய கட்சி தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக திமுக அரசை விமர்சிக்கப்பட்டது.

மேலும் சென்னையில் கொலை சம்பவமும் போதை பொருள் விற்பனையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ளார்.

Tags :
ArunChennaiPolice CommissionerSandeep Rai Rathore
Advertisement
Next Article