Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் குறும்பட இயக்குநர் வீட்டில் NIA அதிரடி சோதனை!

08:53 AM Feb 08, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கொரட்டூரில், மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சென்னை கொரட்டூரில், குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில், ஹைதராபாத்தைச் சேர்ந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முகில் சந்திரா, கொளத்தூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஆவடியிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ திடீர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் பல இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆவடியிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
ChennaiHyderabad NIANIARaid
Advertisement
Next Article