Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ள பாதிப்பு எதிரொலி | சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை!

01:20 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

சென்னையை முழுவதுமாக புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னையின் முக்கிய சாலைகளிலும் கூட இன்னும் மழைநீர் முற்றிலும் வடியாத நிலையில்,  திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில்,  நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,  கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  மழை சற்றே ஓய்ந்துள்ள போதும்,  அடுத்த 3 மணி நேரத்திற்கு மீண்டும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல பகுதிகளிலும் இன்னும் மின்விநியோகம் சீராக்கப்படாத நிலையில்,  சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article