Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை | கட்டணமில்லா குடிநீர் ATM-ஐ திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11:53 AM Jun 18, 2025 IST | Web Editor
சென்னையில் கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Advertisement

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.6.04 கோடியில் 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுன் 18) தொடங்கி வைத்தார். இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

Advertisement

இதையும் படியுங்கள் : இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

பின்னர் அங்கிருந்தபடியே மாநகரின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் செயல்பாட்டையும் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மேயர் ப்ரியா, அரசு அதிகாரிகள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர். கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் கோடம்பாக்கம், வளசரவாக்கம், அம்பத்தூர், தண்டையார்பேட்டை, மணலி, அடையாறு, அண்ணாநகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

Tags :
ATMChennaicm stalinCMO TAMIL NADUDMKMK Stalinnews7 tamilTN GovtWaterWater ATM
Advertisement
Next Article