Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

31 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் காலை 8 மணி வரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07:19 AM Aug 22, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் காலை 8 மணி வரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, கோடம்பாக்கம், கோயம்பேடு, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், அடையார், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 8 மணி வரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், நாகப்பட்டினம், நாகப்பட்டினம், நாகப்பட்டினம், நாகப்பட்டினம். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 31 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ClimateHeavyRainRainTamilNaduweatheralertWeatherForecastWeatherUpdate
Advertisement
Next Article