Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert : 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

08:33 AM Oct 21, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையின் பல பகுதிகளில் காலை 6 மணி போல் மழை பெய்தது. திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளில் காலை சாரல் மழை பெய்தது.

இதுதவிர பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில் 17 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Meteorological CentreRainrain alert
Advertisement
Next Article