Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மகாராஷ்டிராவில் ஒருவாரம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு!” - இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுப்பு!

07:57 PM Sep 27, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வட மத்திய மகாராஷ்டிராவுக்கு அருகில் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதன் காரணமாக வரும் நாட்களில் மகாராஷ்டிாரவில் மழைப் பொழிவு இருக்கும். இன்று (செப்.27) மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக கொங்கண் பகுதியில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பால்கர், புனே, நந்துர்பார், துலே ஆகிய இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 12 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மகாராஷ்டிராவுடன் கொங்கன் மற்றும் கோவா பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இதனிடையே, மத்திய மகாராஷ்டிராவின் பல பகுதிகள் மற்றும் குஜராத்தில் செப்.28-ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும். அதனால் பொது மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் படியும், மழையை எதிர்கொள்ள தயாராகும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அதேபோல, தெற்கு குஜராத் பகுதிகள் மற்றும் கொங்கன் மற்றும் கோவாவின் கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையின் போது மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
IMDMaharashtraMumbaired alert
Advertisement
Next Article