Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

04:51 PM Jan 30, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  ஜனவரி 30 ஆம் தேதி தென் தமிழ்நாடு,  டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதி தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.  உள் தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரி 01 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 02 ஆம் தேதி தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

பிப்ரவரி 03 ஆம் தேதி முதல் பிப்ரவரி 05 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

உறைபனி எச்சரிக்கை 

ஜனவரி 30 ஆம் தேதி மற்றும் ஜனவரி 31 ஆம் தேதி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.  அதிக பட்ச வெப்ப நிலை 30 - 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 23 - 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.

Tags :
FrostMeteorological CentreNews7Tamilnews7TamilUpdatesRainWeather Updates
Advertisement
Next Article