காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
07:39 AM Nov 22, 2025 IST
|
Web Editor
Advertisement
கடலோர தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
அதன்படி, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article