Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07:33 AM Aug 07, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், ராயல சீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நிலவுகிறது.

Advertisement

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ClimateHeavyRainRainRainUpdateTamilNaduweatheralertWeatherForecastWeatherUpdate
Advertisement
Next Article