Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்து 3மணி நேரத்தில் 4மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

07:40 AM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

அடுத்து மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
தென் இலங்கை கடற்கரையையொட்டிய வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) தென் தமிழ்நாட்டின் பல இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்து மூன்று மணி நேரத்தில், மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது.

லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ,தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

லேசான மழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Meteorological Departmentnews7 tamilNews7 TamilUpdatesRainWeather Updates
Advertisement
Next Article