Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

05:28 PM Nov 15, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவ.19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஒடிஸா கடற்கரைக்கு நகரும் எனவும், இது புயலாக மாறுமா என்பது நாளை தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.  கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 36 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாகவும்,  அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்திலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Chennai RMCcuddlorekaraikalMetrological DepartmentNews7Tamilnews7TamilUpdatesPuducherryRainrain alertTn RainsWeather Update
Advertisement
Next Article