Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

07:46 AM Nov 10, 2023 IST | Web Editor
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் 09 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை திருப்பூர், கரூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
#ClimateChennai RMCHeavy rainNews7Tamilnews7TamilUpdatesRainRain UpdatesTN RainWeather Updates
Advertisement
Next Article