Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாம்பியன்ஸ் ட்ராபி | கெத்து காட்டிய விராட் கோலி... பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
09:49 PM Feb 23, 2025 IST | Web Editor
Advertisement

8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

இதையும் படியுங்கள் : தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள்… நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடியது. அந்த வகையில் களமிறங்கிய ரோகித் சர்மா 20 ரன்களிலும், சுப்மன் கில் 46 ரன்களிலும் வெளியேறினர். இவர்களை அடுத்து ஆடிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.

பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் அடித்தும், அக்சர் படேல் 3 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

Tags :
Champions TrophyCricketIND VS PAKIndianews7 tamilNews7 Tamil UpdatesPak vs IndpakistanSportsSports Update
Advertisement
Next Article