குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் முதன்முதலாக 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்!
குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 14 பேருக்கு குடியுரிமைக்கான சான்றிதழை மத்திய அரசு முதன்முதலாக இன்று வழங்கியுள்ளது.
கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இதற்கு 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டமானது வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதாவது ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்தின்கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வழங்கியது. குடியுரிமை திருத்த சட்ட அமலுக்கு முதல் குடியுரிமை சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
டெல்லியில் மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லா இந்த சான்றிதழ்களை வழங்கினார். விண்ணப்பதாரர்களை வாழ்த்தி குடியுரிமை சான்றிதழ்க்கான அம்சங்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.