6வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு..?
இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் 6பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் 5% - 10% பங்குகளை விற்க இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. பொதுத் துறையில் தற்போது 80%க்கும் அதிகமான பங்குகளை இந்திய அரசு வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆறு பொதுத்துறை வங்கிகளில் அரசாங்க உடைமை 80% அதிகமாக உள்ளது.
6 வங்கிகள் பின்வருமாறு ..
1. பாங்க் ஆஃப் இந்தியா
2. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
3.பஞ்சாப் & சிந்து வங்கி
4. பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா
5. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
6. UCO வங்கி
இதன்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை தனியார்மயமாக்குவதற்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது 6 வங்கிகளின் பங்குகளை தற்போது விற்க முடிவு செய்துள்ளது.