Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத் தேர்வு!

பிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட உள்ளது.
05:52 PM Jun 25, 2025 IST | Web Editor
பிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட உள்ளது.
Advertisement

தேசிய கல்விக்கொள்கை 2020 அடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதும் வகையில் பொதுதேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஒரு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : “புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

அதன்படி, முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்வை  எழுதுவது கட்டாயம் எனவும், இரண்டாவது பொதுத்தேர்வை எழுதுவது அவர்களது விருப்பம் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஜூனிலும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்த நடைமுறை வரும் 2026ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என சிபிஎஸ் இ அறிவித்துள்ளது.

Tags :
10th CBSE10th Examboard examsCBSEexamSchoolstudents
Advertisement
Next Article