Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருநெல்வேலியில் தொடரும் சாதிய கொடுமை - மேலும் ஒரு சம்பவம்!

02:10 PM Nov 02, 2023 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலியில் இரண்டு இளைஞர்கள் சாதியின் பேரில்,  ஆடை களையப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டு,  தாக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், இதே போல் மேலும் ஒரு சம்பவம் அறங்கேறியுள்ளது.

Advertisement

கடந்த 30-ம் தேதி திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேரை, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கி அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் எந்த சாதி என கேட்டு தெரிந்துகொண்ட பின், இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். அவர்களை மாலை முதல் இரவு வரை வைத்திருந்து சித்தரவதை செய்தனர்.

இருவரையும் மீட்ட ஊர்மக்கள் அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் அறிந்து வழக்கு பதிவு செய்த திருநெல்வேலி மாநகர் தச்சநல்லூர் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பொன்மணி (25), நல்லமுத்து (21), ஆயிரம்(19), ராமர்(22), சிவா(22), லட்சுமணன் (20) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 

இந்த சம்பவம் அரங்கேறிய அதே வேளையில் ஆச்சிமடம் பகுதியில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். இவர் வெட்டியம்பந்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர். அப்போது அவ்வழியாக சென்ற கும்பல், அவரை வழிமறித்து அவரது சாதியை கேட்டு கல்லால் அடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஊர் பெயரையும் சாதி பெயரையும் கேட்டு தாக்குதல் நடத்தியதாக படுகாயம் அடைந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Tags :
Atrocitiescaste issueNellaiNews7Tamilnews7TamilUpdatesTirunelveli
Advertisement
Next Article