Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மும்முரமாக நடக்கும் இறுதி கட்டப் பணிகள்… அப்டேட் கொடுத்த #Pushpa2 படக்குழு!

08:41 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

‘புஷ்பா 2’ திரைப்படத்தின் முதல் பாதிக்கான பணிகளை நிறைவு செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு ‘புஷ்பா 2 தி ரூல்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தை ஆகஸ்டு மாதம் 15ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பாதிக்கான எடிட்டிங், இசை உள்ளிட்ட பணிகள் முடிவடைந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags :
Allu arjunFahadh Faasilnews7 tamilpushpapushpa 2Pushpa 2 The Rule
Advertisement
Next Article